அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

வரலாற்றில் முதன்முறையாக அதிக முஸ்லிம் மாணவர்கள்!
பொறியியல் மற்றும் மருத்துவத்தில் 3 1/2 சதவீத இடஒதுக்கீட்டின் முழுமையான வெற்றி

-அபூசாலிஹ்


இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விகளில் அதிகளவு முஸ்லிம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

இது முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக் கீடு முழுமையாக வழங்கப்படவில்லை என்ற புரட்டல் வாதத்தை புறம் தள்ளும் விதமாக அமைந்து சவுக்கடி கொடுத்தது.

இவ்வாண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில்2699 இடங்களில் முஸ்லிம்களுக்கு 94 இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இது 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் படியே கிடைத்துள்ளது.

1483 இடஒதுக்கீட்டுக்கான இடங்களைக் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரிகள் 15லும் முஸ்லிம்களுக்கு 52 இடங்களும் 348 அரசு ஒதுக்கீடு கொண்ட 5 தனியார் கல்லூரிகளிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு 12 இடங்க ளுக்கு 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 783 இடங்களில் 27 இடங்களில் முஸ்லிம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

ஒரே அரசு பல் மருத்துவக் கல்லூரி யிலும் 85 இடங்களின் இடஒதுக்கீட்டில் மூன்று இடங்கள் முஸ்லிம் சமுதாயத் தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறே பி.இ மற்றும் பி.டெக் அட்மிஷனுக்கு மிக அதிகமான இடங் கள் இடஒதுக்கீட்டின்படி முஸ்லிம் களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இடஒதுக்கீடு பொறியியல் ஒற்றைச் சாளர கவுன்சிலிங்கில் முஸ்லிம் மாணவர் களுக்கு ஏணியாக அமைந்து விட்டது.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக் கான இடஒதுக்கீட்டின் படி 4, 882 இடங்கள் ஒதுக்கீட்டில் கிடைக்கும். அதிலும் முஸ்லிம் மாணவர்களுக்கே சாதகமான நிலை நிலவுவதாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி குறிப்பிடு கிறார்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யும்போது அதிக மதிப் பெண்கள் பெற்ற ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மாணவர்களை விட ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறை முஸ்லிம் மாணவர் களுக்கு சாதகமாக இருக்கும்.

சான்றாக பொதுப் பிரிவில் 195.5 கட்.ஆஃப் மதிப்பெண்கள் எடுத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவரின் ரேங்க் 3,004 பிற்படுத்த வகுப்புக்கான அவரது ரேங்க் 1,725 ஆனால் முஸ்லிம் இடஒதுக்கீட்டின் படி வெறும் 91 ரேங்கிலேயே முஸ்லிம் மாணவர் விரும்பும் சிறந்த கல்லூரி, விரும்பும் பாடம் கிடைக்கும் நிலை உருவாகும்.

முஸ்லிம் மாணவருக்கு இதனால் கட் ஆஃப் மதிப் பெண்ணில் 1 முதல் இரண்டு மதிப்பெண் கூடுதலாக பெற்றதற்கான சாதக மான அம்சம் இடஒதுக்கீட்டின மூலம் கிடைத்து விடுகிறது. மொத்தத்தில் வராது வந்த மாமணி போல் கிடைத்த இடஒதுக்கீடு மூலம் முஸ்லிம் களுக்கான கல்வியிலும் முழுமையாக கிடைத்து விட்டது.

இடஒதுக்கீடு எமது மாணவர்களுக்கு உயர் கல்விக்கான கூடுதல் உத்வேகத்தை வழங்கியுள்ளது - தமுமுக தலைவர்

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில செய்தி ஏட்டிற்கு வழங்கிய நேர்காணலில்..

இந்த இடஒதுக்கீடு எமது சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்விக் கான கூடுதல் உத்வேகத்தை வழங்கி யுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஆண்டுகளில் ஏராளமான மாணவர் கள் தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு ஊக்கமளிக்கிறது.

கவுன்சிலிங் கின் போது அதிக கட் ஆஃப் மதிப் பெண்கள் வாங்கிய முஸ்லிம் மாணவர்களுக்கு பொதுப் பிரிவில் அட்மிஷன் வழங்க வேண்டும். குறைவான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் படி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.